6/26/2009

மைக்கல் ஜாக்சன் “THE KING OF POP" க்கு சமர்ப்பணம்





நண்பர்களே வணக்கம்...

பாப் பாடல்களின் அரசன் என வர்ணிக்கப்படும் மைக்கல் ஜாக்சன் (மைக்கல் ஜோசப் ஜாக்சன்) லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று மரணமடைந்தார்...மைக்கல் ஜாக்சன் என்றால் தெரியாதவர்கள் மிகக்குறைவு...அந்த அளவுக்கு உலக மக்களை தன் குரலாலும் ஆட்டத்தாலும் கவர்ந்திருந்தார்...

மைக்கல் ஜாக்சன் 1958 ஆகஸ்ட் 29ம் திகதி பிறந்தார்..அவரது குடும்பத்தில் 7வது குழந்தையாக பிறந்தார்..தனது 11 வது வயதில் முதல் முதலாக குழுவாக இசையில் தடம் பதித்தார்..பின்னர் 1971ல் சுயமாக மேடை ஏறினார்..” பாப் இசையின் அரசன் “ என வர்ணிக்கப்பட்ட இவரது 4 ஆல்பங்கள் உலகின் சிறந்த விற்பனை ரெக்காட்டை(world'd best - selling record)கொண்டுள்ளன..Off the wall(1979) , Bad(1987) , Dengerous(1991) , History(1995) என்பனவே அவையாகும்..ஆனாலும் அவரது Thriller(1982) எப்போதும் சிறந்த விற்பனையாகும்..

1980களில் ஜாக்சனே அமெரிக்க ஆபிரிகாவின் சிறந்த பாடகராக இருந்தார்..அவரது "Beat it" , "Billie jean" போன்ற பாடல்களாலும் அவரது தனித்துவமான நடனத்தாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்..அவரது பாடல்கள் இலகுவில் புரிந்து கொள்ள கூடியவை..

அவர் பல கின்னஸ் உலக சாதனைகளையும் , க்ராமி அவார்டுகளையும் (Most successful entertainer of all time உட்பட)பெற்றுள்ளார்....இவ்வளவு பெருமைமிக்க மைக்கல் ஜாக்சன் சிரிது காலம் இதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.. நேற்று தனது 50வது வயதில் காலமானார்..
அவரின் ரசிகனான நான் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்....
அவரின் படங்கள் சில...



























மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

மைக்கல் ஜாக்சன் “THE KING OF POP" க்கு சமர்ப்பணம்SocialTwist Tell-a-Friend

6/20/2009

அட நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க...


ஹாய் நண்பர்களே...

நான் அண்மையில் கண்டு களித்த சில பிரமிக்க வைக்கும் படங்களை பகிர ஆசைப்படுகிறேன்...

இவை மிகவும் ஆச்சரியத்தை உண்டு பண்ணின...

பார்த்து மகிழுங்கள்...






























எப்பிடி படங்கள்???


உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இடுங்கள்...

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்....
:)))



அட நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க...SocialTwist Tell-a-Friend

6/15/2009

ஒரு புதிர்..விடையும் தருகிறேன்....


என்ன மக்கா சௌக்யமா???

பதிவு போட்டு 1 வாரம் ஆச்சு...
அதான் நம்ம கிட்ட ஒருவன் கேட்டதை உங்களிடம் நான் கேற்கிறேன்..

இத புதிர்ன்னு சொல்லுறதா இல்ல வேற எப்பிடியாவது சொல்லுறதான்னு தெரியல...ஓகே புதிர்ன்னு வச்சுகலாம்...

புதிருக்கு ரெடியா???

*முதலில் 9க்குள் ஒரு எண்ணை நினைக்க..


*அதனை 9 ஆல் பெருக்குக..( x9 )

*வரும் எண்கள் இரண்டையும் கூட்டுக...
(இப்போ 54 வந்தால் 5+4 என..)

*வந்த எண்ணிலிருந்து 5 ஐ கழிக்க...( -5 )

*இனி A=1 , B=2 , C=3 .............. Z=26 என உங்கள் எண்ணுக்கு எழுத்து ஒன்றை பெற்றுக்கொள்க...(ஆங்கில எழுத்துகள் மட்டுமே..)

*ஓகேவா இனி உங்களின் எழுத்தை முதல் எழுத்தாக கொண்ட ஒரு நாட்டை நினைக்க....

* நினைத்த நாட்டின் கடைசி எழுத்தை, முதல் எழுத்தாக கொண்ட ஒரு மிருகத்தை நினைக்க...

*அந்த மிருகத்தின் கடைசி எழுத்தை முதல் எழுத்தாக கொண்ட ஒரு பழத்தை நினைக்க....

ஆச்சா???

இனி விடைக்கு வருவோம்...

நீங்கள் நினைத்தவை

1.Denmark , Kangaroo , Orange
2.Dominica , Ass , strawberry

இந்த 2 ல் ஒன்றா???

இல்லாவிட்டால் உங்கள் விடையை பின்னூட்டமாக இடவும்...(இதுக்காக ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்... :)))

சரி இனி எப்பிடி இதுன்னு பார்ப்போம்...

9க்குள் எந்த எண்ணை 9 ஆல் பெருக்கி , வரும் விடையை கூட்டினாலும் 9 தான் வரும்....(உதாரண்மாக 5 ஐ எடுத்தால் 5 x 9 = 45 ,4 + 5 =9....)
அதனால ஒன்பதிலிருந்து 5 கழித்தால் 4 விடையாக வரும்...இனி 4 க்கு எழுத்தை தேடினால் D கிடைக்கும்...

D யில் தொடங்கும் நாட்டை நினைக்க சொன்னால் அனைவரும் இலகுவில் நினைப்பது Denmark...இல்லாவிட்டால் Dominica தான்...
இனி K வில் தொடங்கும் மிருகம் என்றால் உடனே Kangarooவை நினைப்பர்,அல்லது (Dominica நினைத்தவர்கள்..)A வில் தொடங்கும் Ass ஐ நினைப்பர்...

இனி பழம் என்றவுடன் O வில் தொடங்கும் Orange ஐ நினைப்பர் அல்லது (Assஐ நினைத்தவர்கள்)...Sவில் தொடங்கும் Strawberryஐ நினைப்பர்....

இப்படிதான் வந்தது விடை....
_____________________________________________________________________

சரி இனி இந்த பதிவ படிப்பவர்களுக்கு ஒரு தத்துவமும் ஒரு படமும் இலவசம்...

தத்துவம்...

”முயற்சி செய்யாமல் போவதை விட முயற்சி செய்து தோற்றுபோவது மேலானது...”


ஒரு படம்...

நான் அண்மையில் பார்த்து ரசித்த ஒரு படம்....



எப்பூடி???

ஓகே இனி விடை பெறும் நேரம்....
இப்ப போறேன்,,<<>>>>>>>>>>>>>>>>>திரும்பி வருவேன்னு சொல்ல வந்தேன்...

வர்ட்டா????

ஒரு புதிர்..விடையும் தருகிறேன்....SocialTwist Tell-a-Friend

6/06/2009

என் நாடக அனுபவம்...!!!

ஹாய் வலை நண்பர்களே...

என்னடா இவன் எப்ப பாத்தாலும் எதையாவது copy , paste பண்ணுறானேன்னு சில நல்ல உள்ளங்கள் சொல்லுறது கேக்குது....

அதுக்காகத்தான் இந்தமுறை என் அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிரலாம்ன்னு கிளம்பி இருக்கேன்...

கடந்த வெள்ளிக்கிழமை என் பள்ளியில் "நாடக போட்டி" நடந்தது.. நாமளும் நடிச்சோம்....
நம்மளுக்கு இதுவரையும் 2 முறை நடிச்ச அனுபவம் இருந்தது...பயிற்சிக்கு கூப்பிட்டார்கள்.. நானும் போனேன்..கதைய சொன்னாங்க...
பரவாயில்ல கதை கேக்க சுமாராதான் இருந்தது..
சரி கதையில 2 ஹீரோ..ஒரு ஹீரோ கதையின் சொந்தக்காரர்..அடுத்த ஹீரோ யாருன்னு கேக்க , நண்பன் ஒருவன் எழுந்தான்..[காரணம் மற்றவர்கள் நீண்ட நேரம் போயும் எழும்ப வில்லை.. :))) ]
சரி நாடகத்தின் முதல் நாள் பயிற்சி..
நடிக்க ஆரம்பித்தார்கள்... இரண்டாவதாக எழுந்த என் நண்பன் ர்ர்ரொம்ப நாடகத்தனமா நடிச்சான்...
கதையை இயக்கும் நண்பன் பாத்துட்டு இந்த நாடகம் வெற்றாதுன்னு கவலைப்பட்டான்...பிறகு என்ன ஹீரோவாகச்சொன்னான்...
நான் ஹீரோவாக்கப்பட்டேன் ...[ஆனாலும் எனக்கு ஒரு பயம்..ஏனென்றால் நான் இதுவரை நடித்த நாடகம் இரண்டும் தோற்று விட்டது...]

நடிக்க தொடங்கியதும் இயக்கும் நண்பனுக்கு என்னை ரொம்ப பிடித்து விட்டது... நீ இந்த வேடத்தை ரொம்ப நல்லா பண்ணுறடா..நீயே செய்..நாடகம் நிச்சயமா வெத்தும்..அப்பிடின்னு சொன்னான்... நான் அவனிடம் "மச்சான் நான் இதுக்கு முதல் ஒரு தடைவை ஹீரோவா பண்ணியிருக்கன்..ஆனா அது தோற்றுப்போச்சு"ன்னு சொன்னேன்...அதுக்கு அவன் "பரவா இல்ல இந்த முறை நல்லா செய்வோம்"என்றான்...

சரி ஆண்டவன் விட்ட வழி அப்பிடின்னு தொடங்கி செய்தோம்....
5 வதுமுறை பயிற்சி செய்து கொண்டிருந்தோம்...[ நாளைக்கு நாடக போட்டி..].அப்போது என் இன்னொரு நண்பன் வந்து "மச்சான் எங்க நாடகத்துல நடிக்கிறேன்னு சொல்லீட்டு இப்ப கொஞ்ச பேர் வாராங்க இல்லடா" நீங்க கொஞ்ச பேர் நடிக்க முடியுமான்னு கேட்டான்..அப்ப நானும் என் நண்பர்களும் யோசிச்சுட்டு சரி நம்மளுக்கு சான்றிதழ் கிடிக்குதுதானேன்னு ஓகே சொல்லீட்டோம்..[அந்த கதைக்கு பயிற்சியே பண்ண வில்லை..]

அடுத்த நாள் போட்டி...
எங்கள் நாடகம் 2வதாக அரங்கேறியது[மொத்தமாக 5 நாடங்கள்].. நானும் நடித்தேன்[பயத்துடன்] ...
ஒரு வழியாக முடிந்தது ...அப்போது அனைவரும் எங்கள் நாடகத்தயும் [என்னையும்] பாராட்டினார்கள்...அடுத்த நாடங்களை பார்ப்பதற்கு கூட நேரமில்லை...அடுத்த நாடகத்திற்க்கு தயார் ஆக வேண்டும்...[இந்த நாடகத்தில் சின்ன வேடம் தான்..]

அதுவும் கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறியது..
ஆனாலும் இந்த நாடகத்தையும் விட எங்கள் நாடகத்திற்கே அதிக வரவேற்பு....

சரி இனி விருது வாழங்க வரச்சொன்னார்கள்...
அங்கு வந்த நடுவர் நாடகத்தைப்பற்றி 20 நிமிடம் பேசிவிட்டு முடிவுகள் பின்னரே அறிவிக்கப்படும்ன்னுட்டார் ...
முடிவுகளுக்கு இன்னும் அரை மாதம் அளவில் செல்லுமாம்....
அதற்காக காத்திருக்கிறோம்...

கிடைத்தவுடன் சொல்லுகிறேன்...
அடுத்தபதிவில் சந்திப்பொம்...
:)))

என் நாடக அனுபவம்...!!!SocialTwist Tell-a-Friend