8/14/2009

மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில.. - பார்ட் 2

ஹையோ...ஹையோ...


மற்ற நண்பர்கள் எல்லாம் ஏதேதோ புதுசு புதுசா பதிவ போட்டு கலக்கு கலக்குன்னு கலக்குறாங்க...
நாம தான் எப்பயாவது ஒரு பதிவ போட்டு கிட்டு இருக்கோம்...
அதான் இப்ப கொஞ்சம் பதிவர்களை சிரிக்க வைக்கலாம்ன்னு திரும்ப கெளம்பி இருக்கேன்....

இதோட பார்ட் 1 இங்க..



இத ஜோக்ஸ்ன்னு நினச்சு போடுறேன்....
சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
:)))



1 . உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...

_________________________________________________________

2 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...
ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

_________________________________________________________
3 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...
இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

_________________________________________________________

4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

_________________________________________________________

5 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...

_________________________________________________________

6 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

_________________________________________________________

7 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....

_________________________________________________________

8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...

__________________________________________________________

9 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....

_________________________________________________________

10 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...

ஏன் அதுல என்ன தப்பு???

ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
_________________________________________________________

எப்பூடி???
மீண்டும் சந்திப்போம்....



மண்டையை பிளக்கும் "கடி"ஜோக்குகள் சில.. - பார்ட் 2SocialTwist Tell-a-Friend

14 Responses:

ப்ரியமுடன் வசந்த் said...

// சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....//

top டக்கர்

சி.கருணாகரசு said...

நச்!

வெட்டிப்பயல் said...

:-)

வால்பையன் said...

சூப்பர் தல
மெய்யாலுமே வாய் விட்டு சிரிச்சேன்!

வால்பையன் said...

சூப்பர் தல
மெய்யாலுமே வாய் விட்டு சிரிச்சேன்!

Nathanjagk said...

கடைசி வரைக்கும் ​ஜோக் ​சொல்லவேயில்லியே??

நட்புடன் ஜமால் said...

4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...
]]


நல்லா சிரிச்சேன்ப்பா

முரளிகண்ணன் said...

:-))

அப்துல்மாலிக் said...

ஒரே கடி
ரத்தம் வடியுது

மருத்துவரய்யா ஏதாவது பண்ணுங்களேன் இதுமாதிரி கொசுக்களை கொல்வதற்கு ஹெ ஹெ ஹெ

Unknown said...

superb

Anonymous said...

// சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....//

Had my laughter for the day

Sridhar

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...//
இது சூப்பர் நண்பரே!

கார்த்திகைப் பாண்டியன் said...

நச்..;-))))))))))

வழிப்போக்கன் said...

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...